கோவில் உண்டியல் திருட்டு.!!

கோவை டாடாபாத், ஆறு முக்கு வீதியில் அருள்மிகு அலங்கார மாரியம்மன் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவில் கோவில் பூசாரி முரளி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கோவிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட உண்டியலை காணவில்லை. பணத்துடன் உண்டியலை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.