மனைவி நினைவு நாளில் துக்கம் தாங்காமல் கணவரும் தூக்கிட்டு தற்கொலை..

கோவை:  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆமந்தக் கடவை சேர்ந்தவர். முருகன் ( வயது 49) கூலிதொழிலாளி. இவரது மனைவி கலாமணி ( வயது 45) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் .அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முருகனின் மனைவி கலாமணி உடல் நலக் குறைவால் திடிரென்று இறந்தார். இதனால் முருகன் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த 31 ஆம் தேதி உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சை பெற்ற பின் உக்கடம் சி.எம்.சி. காலனியில் உள்ள தனது உறவினர் மாரிசாமி வீட்டில் தங்கினார் .நேற்று முன்தினம் கலா மணியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். இதனால் மனைவியை நினைத்து முருகன் அழுதார் . மனைவி இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. இன்று அவரது நினைவு நாள் என்னால் என் மனைவி பிரிவை மறக்க முடியவில்லை. இதே  நாளில் நானும் அவருடன் செல்ல போகிறேன் என்று கூறியுள்ளார் உடனே அவருக்கு மாரிசாமி ஆறுதல் கூறினார். ஆனாலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முருகன் மாரிசாமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.