கோவை ஓட்டலில் மும்பை பேராசிரியையை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் – வங்கி அதிகாரி மீது பெண் பரபரப்பு புகார்..!

கோவை : மும்பையை சேர்ந்தவர் 43 வயது பெண். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். பி.எச்.டி .முடித்த அந்தப் பெண் இரண்டாவது பிஎச்.டி படிப்புக்காக கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து சென்றார். அந்த பேராசிரியை கடந்த 20 15 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு சென்றார். அப்போது அவருக்கு ‘அங்கு ஒரு வங்கியில் கணக்காளராக பணியாற்றிய பாலக்காட்டைச் சேர்ந்த கோபு குமார் ( வயது 43) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் வங்கியில் பணம் எடுக்க வந்த பேராசிரியைக்கு கோபுக்குமார் உதவினார். பின்னர் அவர் வங்கி செல்லானில் குறிப்பிட்டு இருந்த பேராசிரியை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களிடம் நண்பராக இருக்க விரும்புவதாக கூறி அடிக்கடி பேசி வந்தார். இந்த நிலையில் பேராசிரியை தான் பி.எச்.டி படிக்க கோவைக்கு வருவதாக கூறினார். அதைக் கேட்ட கோபு குமார் தானும் பி.எச்.டி படிக்க நீங்கள் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் . இதையடுத்து கடந்த 20 21 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேராசியையும் கோபு குமாரும் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் காரில் பல்கலைக்கழகத்துக்கு சென்றனர். அப்போது பேராசிரியையிடம் தனது உறவினர் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி கோபுகுமார் அழைத்துச் சென்றார் .முன்னதாக அவர் சாப்பிடலாம் என்று கூறி காளப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கினார்கள். அங்கு அவர் பேராசிரியையிடம் நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி திடீரென்று தான் கொண்டு வந்து தாலியை பேராசிரியை கழுத்தில் கட்டினார். இதனால் பேராசிரியை அதிர்ச்சி அடைந்து தகராறு செய்துள்ளார். உடனே பேராசிரியையை சமாதானப்படுத்தி கோபுகுமார் ஆசை வார்த்தை கூறி, இனி நீங்கள் தான் என் மனைவி என்று கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது . மேலும் அவர் உல்லாசமாக இருந்ததை பேராசிரியைக்கு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்ததாராம். இந்த நிலையில் பேராசிரியை உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் விடாமல் கோபு குமார் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேராசிரியை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோபு குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..