சூலூரில் வீடு தீப்பற்றி எரிந்தது..

சூலூர் இரண்டாவது வார்டு அண்ணாமலை தேவர் சந்துப் பகுதியில் குடியிருக்கும் அருணாச்சலம் என்பவர் துடைப்பம் விற்பனை செய்யும் தொழிலை செய்பவர். அவர் நேற்று இரவு வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு தேனீர் குடிப்பதற்காக கடைக்கு சென்று விட்டார் .அப்போது எதிர்பாராத விதமாக விளக்கின் நெருப்பு அருகில் இருந்த பழைய குப்பைகள் துடைப்பத்தின் மீது பட்டு பற்றி எரிந்தது . அவர் வீடுகளில் தேவையில்லாத பழைய காலண்டர் அட்டை குப்பைகள் அதிகமாக சேர்த்து வைத்திருந்ததால் நெருப்பு அதிகமாக பற்றி வீட்டில் கூரை எரிந்தது. வீடு எரிவதை கண்டதும் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக தீயை அணைக்க அவர்கள் வீட்டில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றினார்கள் . தீ கட்டுக்குள் அடங்காமல் அதிகமாக எரிந்தது. வார்டு கவுன்சிலர் கருணாநிதி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்.