வேங்கை வயல் சம்பவத்தில் திடீர் திருப்பம்… ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை… குழப்பத்தில் சிபிசிஐடி .!!

புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை.

வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிச.26-ல் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. வேங்கைவயலில் மேல்நிலை நீர் தொட்டியில் 2022 டிச.26ல் மனிதக் கழிவு கலந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. வழக்கு தொடர்பாக 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு 4 கட்டங்களாக டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது. 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தடயவியல் ஆய்வின் முடிவுகளில் 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் ஒத்துப்போகவில்லை என தெரியவந்துள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகாததால் விசாரணையில் பின்னடைவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.