வேகமாக வந்த லாரி பைக் மீது மோதி கணவன்,மனைவி பலி – டிரைவர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 49)கூலித் தொழிலாளி இவரது மனைவி காமாட்சி ( வயது 40 )இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.கோட்டூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது .இதில் இருவரும் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பலியானார்கள். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆனைமலை கோட்டூர் மலையாண்டி பட்டினத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமார் ( வயது 39 )என்பவர் கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.