கோவை பைனான்ஸ் அதிபரிடம் ரூ.5 கோடி மோசடி- கணவன், மனைவி உட்பட 3 பேர் மீது புகார்..!

கோவை கணபதி கோபால்சாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர்.இவரிடம் சரவணன், கல்பனா, ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ. 5 கோடி கடன் வாங்கினார்கள். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர் .பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செந்தில் குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் சரவணன் அவரது மனைவி கல்பனா, ரவிந்திரநாத் ஆகியோர் மீது கொலை மிரட்டல், மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..