கோத்தகிரி அருகே கொடூரமாக கொல்லப்பட்ட சிறுத்தை!…

ஊட்டி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேல் தட்டப்பள்ளம் தனியார் எஸ்டேட்டில், 3 வயதுடைய ஆண் சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கி இறந்துள்ள நிலையில், அதன் மூன்று கால்கள் வெட்டப்பட்டுள்ளது. டி.எப்.ஓ., கவுதம் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தபின் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. டி.எப்.ஓ., உத்தரவுபடி, கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி ரேஞ்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை நடக்கிறது.