அனுமதி பெறாமல்அதிமுக கொடி கம்பம் நட்டிய நிர்வாகி மீது வழக்கு…

கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் உள்ள டிவிஷனல் என்ஜினியர் அலுவலகம் அருகே அனுமதி இல்லாமல் அ.தி. மு.க கொடி கம்பங்கள் நட்டிருப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சந்திரன்அங்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போதுஅந்தப் பகுதியில் காவல்துறை- மாநகராட்சிஅனுமதி பெறாமல் 12 அதிமுக கொடி கம்பங்கள் நட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள்பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஹைவேஸ் காலனி அதி.மு.க. துணை செயலாளர் லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.