மீஞ்சூரில் தலையில்லாத உடல்… சோழவரத்தில் மனித தலை.!!

சென்னையை அடுத்த மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் புதிய வசந்தபவனுக்கு எதிரே உள்ள காந்தி ரோடு என்ற இடத்தில் பச்சை நிற போர்வையால் போர்த்தி ஒரு மனித உடல் கிடைப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து தலை இல்லாத உடலை மீட்டு தலை இல்லாத இறந்த நபர் யார் என மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் . இந்த நிலையில் சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருங்காவூர் சுடுகாட்டில் ஒரு மனித தலை மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனித உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது என தெரிய வந்தது. இறந்து போனவரின் தலையும் உடலையும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . போலீசார் தீவிர விசாரணையில் இறந்த நபர் அஸ்வின் வயது 24 என தெரிய வந்தது. இறந்த அஸ்வின் மீது திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பெண் கொடுமை வழக்கு ஒன்று நி லுவையில் உள்ளது . மேலும் மீஞ்சூர் போலீசார் அதிரடி விசாரணையில் முக்கிய குற்றவாளி ஆன அஜித் என்கிற அவ் ஜா வயது 21 கல்பனா பெயர் ஏழுமலை வழுதிகை மேடு திருப்பாலைவனத்தை சேர்ந்தவன் கைது செய்யப்பட்டுள்ளார். மீஞ்சூர் காவல் நிலைய மிகப்பெரிய ரவுடியான இவன் மீது கொலை முயற்சி வழக்கும் கொள்ளை வழக்கும் நிலுவையில் உள்ளது. திருப்பாலைவனத்தைச் சேர்ந்த அஸ்வின் வயது 24 என்பவர் கொலை குறித்தும் கொலையில் தொடர்புடையவர்கள் குறித்தும் அவ் ஜா என்கிற அஜித் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கொலையான அஸ்வின் தன்னுடைய உறவினரான ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இது சம்பந்தமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் அஜய் மோகன் மற்றும் சிலருடன் சேர்ந்து அஸ்வினை கொலை செய்து தலையை பெருங்காவுர் சுடுகாட்டில் வைத்துவிட்டு உடலை திருவெற்றியூர் நெடுஞ்சாலை யில் புதிய வசந்தபவனுக்கு எதிரே காந்தி சாலையில் வைத்ததாக கூறினார் .  இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..