கோவை தனியார் வங்கி மானேஜரிடம் ரூ.45 லட்சம் மோசடி.!!

கோவை சாய்பாபா காலனி, ரமணா லேஅவுட்டை சேர்ந்தவர் நிக்சன் ( வயது 47) இவர் புலியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் தலைமை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாலக்காடு தத்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கும்,அவரது மனைவிக்கும் நம்பிக்கை அடிப்படையில் ரூ.45 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பழனிச்சாமி மோசடி செய்து விட்டார் .இது குறித்து நிக்சன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..