மதுபோதையில் கத்தியை காட்டி 3 ரவுடிகள் அட்டகாசம்.!!

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் கணபதி நகரில் மது போதையில் 3 ரவுடிகள் கைகளில் கத்தியை வைத்துக் கொண்டு நாங்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரவுடிகள் எங்களைப் பார்த்து தான் மிகப்பெரிய ரவுடிகளும் கொலைகாரர்களும் தலைத் தெறிக்க ஓடுவார்கள் .அருகில் இருந்த பொதுமக்களை கத்தியால் தாக்கி வருவதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிரடி போலீஸ் படையினர் இயந்திர துப்பாக்கிகள் மூலம் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்1. அபினேஷ் வயது 25 திருப்போரூர் தாலுகா செங்கல்பட்டு மாவட்டம் 2.விஷ்ணு வயது 22 ஏரி பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் இவர்கள் இருவரையும் போலீசார் பிடிக்கும்போது சார் நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் ரவுடிகளுக்கே ட்ரெயினிங் கொடுப்போம் என கூறிக் கொண்டிருக்கும் போதே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர் .உடன் இருந்த மற்றொரு ரவுடி முத்துக்குமார் காவனூர் கிராமம் குன்றத்தூர் என்பவன் போலீசார் வருவதற்கு முன்பே மாட்டினால் போலீசார் நம்மை கஞ்சி காய்ச்சி விடுவார்கள் என நினைத்து பயந்து ஓடிவிட்டான். மேலும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் மீது மறைமலைநகர் திருப்போரூர் கூடுவாஞ்சேரி மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன .இவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை போட்ட போலீசார் மது அருந்தியது தெரிய வந்தது. மேலும் இவர்கள் அருகே இருக்கும் பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து முத்துக்குமார் என்ற ரவுடியை பிடிக்க தனி போலீஸ் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்ட ரவுடிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..