கோவை தொழிலதிபர் காரில் துப்பாக்கி பறிமுதல்.!!

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பிரணவ் தொழிலதிபர். இவர் நேற்று காரில் தனது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி பகுதியில் சென்றார் . அப்போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் ” ஏர்கன் “ரக துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.