1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – வாலிபர் கைது..!

கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கணபதி நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் அரிசி மூட்டைகளை ஒருவர் அடுக்கி வைத்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது . இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பது தெரிய வந்தது. 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..