பியூட்டி பார்லரில் விபசாரம் – 5 அழகிகள் கைது..!

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து பியூட்டி பார்லர் நடத்துவதாகவும், அதில் அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாகவும் காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. உதவி கமிஷனர் கணேசன்,இன்ஸ்பெக்டர் பத்ரகாளி ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் சுஜேஸ் (வயது 39) ஸ்டெபி மோல் (வயது 34) மைசூர் நாகம்மா (வயது 36) பெங்களூர் ராணி ( வயது 29) மைசூர் அக்ஷதா ( வயது 33 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . பியூட்டி பார்லர் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சண்முகம் என்பவரை தேடி வருகிறார்கள்.