பிரபல கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம் துடியலூர் பக்கம் உள்ள கணுவாய், தடாகம் ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் மஜ்கர். இவரது மகன் அலி என்ற அப்துல் ரகுமான் ( வயது 21) பிரபல கஞ்சா வியாபாரி. இவர் கஞ்சா விற்பனை செய்ததாக பல தடவை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் கலெக்டர் கிராந்தி குமார், அப்துல் ரகுமானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது..