ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் டில்லியில் குவிந்தனர்..!

பீஜிங் :புதுடில்லியில், ‘ஜி – 20’ நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று டில்லி வந்திறங்கினார்கள் . ஜி – 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை அடுத்து, பல்வேறு துறை சம்பந்தமான பிரதிநிதிகள் கூட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்த வகையில், ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம், புதுடில்லியில் நடக்கிறது.
இதில் பங்கேற்க, ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் காங், கூட்டத்தில் பங்கேற்க நாளை புதுடில்லி வருகிறார். நேற்று இரவு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவார்வ் , துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவுலட் கவ்ஸோகுலு , மொரீசியஸ் ஆலன் கனு ஆகியோர் டில்லி வந்தடைந்தனர். தூதரக அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.