வேகமாக வந்த லாரி பைக் மீது மோதி பேக்கிரி கேஷியர் பரிதாப பலி..

கோவை சூலூர் பக்கம் உள்ள வட வேடபட்டி ,கோயில் காடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி . அவரது மகன் ரமேஷ் ( வயது 36 ) அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காட்டம்பட்டி- செஞ்சேரிமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செஞ்சேரிமலை பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஈச்சர் லாரி அவரது பைக் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி சத்திய பிரியா சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஈச்சர் லாரி டிரைவர் ஹிசாமுதீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.