மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.6.75 லட்சம் மோசடி- 2 பேர் மீது வழக்கு..!

கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள நரசிம்மபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் குழந்தைசாமி இவரது மனைவி ஜெசிந்தா மேரி (வயது 42) இவரிடம் கோவையை சேர்ந்த சுரேஷ்குமார் .ஜெயா செல்வி ஆகியோர் அறிமுகமானார்கள்.அவர்கள் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பல் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருப்பதாக கூறினார்கள்.இதை நம்பிய ஜெசிந்தா மேரி தனது மகளுக்கு அந்த பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருமாறு ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தார்.அவர்கள் இருவரும் இட வாங்கி கொடுக்காமல் அந்த பணத்தை மோசடி செய்து விட்டனர்.இதுகுறித்து ஜெசிந்தா மேரி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மோசடி வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமார் ஜெயசெல்வி ஆகியோரை தேடி வருகிறார்.