தனியார் நிறுவனத்தில் 1.50 லட்சம் அபேஸ் செய்த ஊழியர் மீது புகார்..!

கோவை கணபதி மாநகர் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சுதர்சன் ( வயது 33)இவர் அங்கு முட்டை மற்றும் கூல்டிரிங்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் சேலம் பச்சை மலையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் கடையில் இருந்த ரு 1.50 லட்சத்தை எடுத்துவிட்டு எங்கோ மாயமாகி விட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது .இது குறித்து அதன் உரிமையாளர் சுதர்சன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தகுமாரை தேடி வருகிறார்கள்.