கோவையில் 34 கிலோ குட்கா பறிமுதல் : வியாபாரி கைது – பெண் மீது வழக்குபதிவு ..!

கோவை ஆர் .எஸ். புரம் தியாகி குமரன் வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செந்தில்குமார் ( வயது 28) இவரது கடையில் நேற்று ஆர் .எஸ். புரம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 800 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.

அதே வீதியில் வசிப்பவர் ஜெயச்சந்திரன். இவரது மனைவி ரேணுகா (வயது 50 ) இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 23 கிலோ 944 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக ரேணுகா (வயது 50) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது