பழ வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் வழிப்பறி – பள்ளி வாகன டிரைவர் கைது..!

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40 ) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் பி .என். புதூர் மருதமலை ரோட்டில் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த ரூ 5 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து நாகராஜ் ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து பி.என்.புதூர், ராதிகா அவென்யூவை சேர்ந்த பிரகாஷ் (வயது 26) என்பவரை கைது செய்தார். இவர் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.