கோவை கல்லூரியின் முன் நின்று மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது..!

கோவை: தமிழ்நாடு முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன் சிலர் நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக மதுக்கரை போடிபாளையத்தைச் சேர்ந்த குள்ளி என்ற ரகு கிருஷ்ணன் (வயது 22) மதுக்கரை மெயின் ரோடு காமராஜ் நகரை சேர்ந்த அஜித்குமார் என்ற பில்லி அஜித் (வயது 25) குனியமுத்தூர் வெற்றிலை கார வீதியைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் ( வயது 21) பிள்ளையார்புரம், கஸ்தூரி கார்டனைச் சேர்ந்த கவதம் (வயது 17) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1,250 கிராம் கஞ்சா ஒரு செல்போன் மீட்கப்பட்டது. 4பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.