பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா மீது கோவை சைபர் கிரைம் போலிசார் வழக்குப் பதிவு!!!

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா மீது கோவை சைபர் கிரைம் போலிசார் வழக்குப் பதிவு!

 

கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான ஷர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2-ந் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாகவும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C ஐடி சட்டத்தின் இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.