கல்லூரி விடுதியில் இன்ஜினியரிங் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை..

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஜெயா அவினாஷ். இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். சொந்த ஊருக்கு சென்று இருந்த ஜெயா அவினாஷ் கல்லூரி விடுதிக்கு வந்து உள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் உடல் நலம் சரியில்லை எனக் கூறி அறையிலேயே இருந்து உள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் அழைக்க சென்று கேட்டபோது வயிற்று வலி இருப்பதாக கூறி அறையில் ஓய்வு எடுத்துக் கொள்வதாக கூறி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி முடிந்த பிறகு அவருடைய நண்பர்கள் சந்தோஷ் அறைக் கதவை தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் விடுதி வாடன் மணிகண்டனை அழைத்து வந்து கதவை உடைத்து பார்த்த போது ஜெயா அவினாஷ் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து புகார் பேரில் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து ஜெயா அவினாஷ் உடலை மீட்டி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயா அவினாஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.