கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகாததால் இன்ஜினியரிங் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராம் நகர், 7வது வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்,எல் ஐ சி ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார் . இவரது மகன் பிரவீன் ( வயது 21) சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் இவர் தேர்வாகவில்லை. இதனால் மன அழுத்தத்துடன் இருந்து வந்தார் . இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை வெங்கடேஷ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..