காட்டில் மர்மமாக இறந்து கிடந்த யானை – வனத்துறையினர் விசாரணை.!

கோவை வனச்சரக வனத்துறையினர் நேற்று தடாகம் அருகே மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பட்டா நிலத்தை ஒட்டி உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் வனத்துறை உயரதிகாரி மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் இறந்து கிடந்த அந்த யானையை ஆய்வு செய்தனர் உயிரிழந்தது பெண் யானை என்பது தெரிய வந்தது. அந்த யானையின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அதே இடத்தில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது..