21 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வியாபாரிகள் கைது..!

கோவை சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாய் சாலிகா ( வயது 56) இவர் பொன்னையராஜபுரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு 21 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ரமேஷ் பாய் சாலிகாதாமஸ் வீதியைச் சேர்ந்த, நபாராம் (வயது 24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..