குடிபோதையில் கீழே விழுந்து மின்வாரிய கமர்சியல் இன்ஸ்பெக்டர் பலி..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னாம்பாளையம், இபன் நகரைச் சேர்ந்தவர் சங்கர் குமார் (வயது 50) இவர் மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவரது தம்பி கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். அதில் இருந்து சங்கர் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தவறி கிழே விழுந்தார் . தலையில் பலத்த காயம் ஏற்ட்டது. அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது தாயார் வனஜா மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..