மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு.!!

மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் இன்று நடந்தது.கோவை மார்ச் 28கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் இன்று (28.03.2024) மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என‌ சுமார் 283 நபர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இக்கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..