தசரா பேரணி … 500 ஆண்டுகள் பழைமையான மதரஸாவுக்குள் திடீரென நுழைந்து பூஜை செய்த இந்து அமைப்புகள்- முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்.!

ர்நாடகா மாநிலம், பிடார் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழைமையான மதரஸா ஒன்று இருக்கிறது. மெஹ்முத் கவன் என்ற அந்த மதரஸா புராதான சின்னங்களில் ஒன்றாகவும், தேசிய நினைவுச் சின்னமாகவும் இருக்கிறது.

தொல்லியல் துறை இதனை பராமரித்து வருகிறது.

இந்த நிலையில், பிடாரில் இந்து அமைப்புகள் சார்பாக தசரா பேரணி நடத்தப்பட்டது. பேரணி மதரஸா அருகே வந்தபோது திடீரென சிலர் மட்டும் `ஜெய் ஸ்ரீராம்’, `இந்து தரம் ஜெய்’ என்று கோஷமிட்டவாறு மதரஸாவின் வெளிக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அவர்கள் மதரஸாவின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு கட்டடத்துக்குள் நுழைய முயன்றது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. உள்ளே நுழைந்தவர்கள் மதரஸா வளாகத்தில் ஒரு ஓரத்தில் நின்று பூஜை செய்தனர். போலீஸார் அவர்களை வெளியில் செல்லும்படி கேட்டுக்கொண்டனர். மேலும், அத்துமீறி மதரஸாவுக்குள் நுழைந்ததாக 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்தச் சம்பவத்துக்கு பிடார் முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டன. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையெனில் தொழுகை நடத்திய பிறகு மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று முஸ்லிம் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.