கல்லூரியில் படிக்க பணம் இல்லாததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு – சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

மதுரை மாவட்டம் பேரையூர்பக்கம் உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் அழகர், இவரது மகன் குணால் ( வயது 19) பிளஸ் 2 படித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முயற்சி செய்தார் .பண வசதி இல்லாததால் சேரமுடியவில்லை. இதனால் ஆனை மலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்தார் .இந்த நிலையில் அவருக்கு இந்த ஆண்டு, ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது.ஆனால் கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்கான பணம் இல்லை .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விசால் நேற்று எலிமருந்து தின்று மயங்கி கிடந்தார்.சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் நல்லு பாண்டியம்மாள் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..