திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த புளியமரம் சாலையில் சாய்ந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வந்த நிலையில் பழமை வாய்ந்த புளியமரம் வேர் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு திடீரென இன்று சாலையில்  விழுந்துள்ளது அதிர்ஷ்டவசமாக சாலையில் யாரும் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படவில்லை.
 தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்தால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சாலையில் சாய்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்துள்ளதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரையில் வாகனம் சொல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..