கோவை மத்திய சிறை கைதி திடீர் மரணம்..

கோவை:  சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி,தாகூர் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அய்யனார் ( வயது 33 )இவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார்.இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..