அனுமதி பெறாமல் வேகத்தடை அமைக்க கூடாது – கோவை மாநகராட்சி எச்சரிக்கை..!

கோவை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வ சுரபி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடை அமைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும் ‘அதன் பின்னர் மாநகராட்சி நிர்வாகம் வேகத்தடை அமைப்பதற்கு உரிய சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து உரிய சாத்திய கூறுகள் இருப்பின் மாநகராட்சி நிர்வாகமே வேகதடை அமைத்துக் கொடுக்கும் .

எனவே பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக நிறுவனத்தினர், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனத்தினர் தன்னிச்சையாக வேகத்தடை அமைக்க கூடாது. தன்னிச்சையாக யாரேனும் வேகத்தடை அமைத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.