இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி – 2 சிறுவர்கள் கைது..!

கோவை சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டத்தைச் சேர்ந்தவர் அமீன் ( வயது 29 )இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.தற்போது வீட்டில் இருந்து வேலை செய்கிறார் . இந்த நிலையில் நேற்று இவர் தனது நண்பர் ராமுவுடன் காளப்பட்டி இரா. மோகன் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது 2 சிறுவர்கள் இவர்களை வழிமறித்து கத்திபை காட்டி மிரட்டி பணம் தருமாறு கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார் , இதனால் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அமீனை வெட்டினார்கள். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அமீன் அவரது நண்பர் ராமுவுடன் சேர்ந்து அந்த சிறுவர்களை மடக்கி பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சரவணம்பட்டி காந்தி சதுக்கத்தை சேர்ந்த சவுந்தர் ராஜ், காளப்பட்டி எம்ஜிஆர் வீதியை சேர்ந்த சேர்ந்தரியாஸ் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் சிறுவர்கள் இல்லத்தில் அடைக்கப்பட்டனர்..