இந்தியாவுடன் சேர ஆசை… போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் மக்கள்..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தான் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்ஜித் பல்திஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு, அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி வருகிறது. எனினும், அதனை இந்தியா ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிகளும் இணைந்திருப்பதான வரைபடமே இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கில்ஜித் பல்திஸ்தானில் உள்ள ஸ்கார்டு என்ற நகரத்தில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், அதற்கேற்ப கார்கில் சாலையில் உள்ள எல்லை தடுப்பை பாகிஸ்தான் அகற்ற வேண்டும் என்றும் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.