கோவை விடுதியில் பல் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை..

கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் சக்தி பிரியா ( வயது 23) இவர் கோவை அருகே உள்ள சூலூர் ஆர். வி .எஸ். பல் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதுகுறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி சக்தி பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ?என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.