கோவை விமான நிலையத்தில் பயணியிடம் 2 துப்பாக்கி குண்டுகள் – போலீசார் சோதனையில் சிக்கியது..!!

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி அருண்குமார் நேற்று விமான பயணிகளிடம் சோதனை நடத்தினார். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சியாம் சிங் ( வயது 42) என்பவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தார். அதில் கைதுப்பாக்கியில் (பிஸ்டல்)பயன்படுத்தக்கூடிய 2 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் விசாரணை நடத்திய போது அந்த குண்டு தனது பைக்குள் எப்படி வந்தது? என்பது தெரியவில்லை என்று கூறினார் .இதையடுத்து அவர் பீளமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அவர் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருவதாக கூறினார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.