கோவையில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்..!

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52,53 வது வார்டு மசக்காளிபாளையம் ரோட்டில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்த கடையின் உரிமையாளர்கள் சிலர் மழைநீர் வடிகால் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர். இது சம்பந்தமான புகார்கள் மாநகராட்சி கமிஷனருக்கு வந்தது. உடனடியாக மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆக்கிரமிப்புகளை இடித்த அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை கிழக்கு மண்டல உதவி நகர அமைப்பு அலுவலர் குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மசக்காளிபாளையம் ரோட்டிற்கு சென்றனர். அவர்கள் மழை நீர் வடிகால் கால்வாய் செல்லும் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகளை ஜே.சி.பி எந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றினர். இதனை ஒட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.