தூங்கும்போது விரலில் பாம்பு கடித்து பெண் சாவு…

கோவையை அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர், மேற்கு மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி யமுனா (வயது 23) இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. அவரை சிகிச்சைக்காகஅங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.