திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள், இவரது மகன் கார்த்தி ( வயது 33) கட்டிட தொழிலாளி இவர் நேற்று மொபட்டில் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜீப்மீது மொபட்மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply