பணமோசடி வழக்கில் பிரியங்கா காந்தி பெயரை சேர்த்த அமலாக்கத்துறை…

பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான எச்.எல். பஹ்வா என்பவரிடமிருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 40 கனல் (ஐந்து ஏக்கர்) அளவிலான விவசாய நிலத்தை வாங்கி, அதே நிலத்தை பிப்ரவரி 2010 இல் அவருக்கு விற்றதில் பிரியங்கா காந்தியின் பங்கு இருப்பதாக குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது.