2 பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு – பீதியில் கோவை மக்கள்.!!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாபு சுரேஷ். இவரது மனைவி ஜெசி மெரிட்டா ( வயது 50) சி.எஸ்.ஐ. பள்ளிகூடத்தில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 8 – 30 மணி அளவில் இவர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ஜெசி மெரிட்டா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் துளசிமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதே போல கோவை நஞ்சுண்டாபுரம், மேற்கு புதூரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி கவிதா (வயது 37) நேற்று இரவு 8 – 40 மணிக்கு நஞ்சுண்டாபுரம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கடந்த ஒரு பவுன் தாலிச் சங்கலியை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார். அடுத்தடுத்து இந்த கொள்ளை சம்பவம் நடந்ததால் இந்த இரு கொள்யையும் ஒரே நபர் செய்திருப்பதாக சந்தேகிக்கபடுகிறது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..