கணவருடன் மொபட்டில் சென்ற பெண் தவறி விழுந்து பரிதாப பலி..

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, உடையாம்பாளையம், பூவாத்தா நகரை சேர்ந்தவர் செல்வம் ( வயது 62 ) இவரது மனைவி சின்னம்மாள் ( வயது 57) நேற்று கணவன் – மனைவி இருவரும் மொபட்டில் பாலசுந்தரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலை தடுமாறி சின்னம்மாள் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கணவர் செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.