தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு – ஓனர் மீது வழக்கு..!

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் காயத்ரி ( வயது 34)இவரிடம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார்.இப்படி பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்று காயத்ரி கூறினார். அதை உரிமையாளர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து இரட்டை அர்த்தங்களில் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.இது குறித்து ஊழியர் காயத்ரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.