ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி..

கோவை: மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு, சிவராஜ் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி .இவரது மகன் ஹேம்நாத் ( வயது 18 ) தனியார் கல்லூரியில் இ.இ.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று வெள்ளிபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார்.குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார்.இது குறித்து தந்தை சுப்பிரமணி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..