பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு.. 

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு..  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ,மகா தேவபுரம் ,தவிட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் , இவரது மகன் கீர்த்தி சீனிவாசன் ( வயது 19) பி.டெக் 3 – ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் காட்டூர் ரயில்வே பாலம் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் முழ்கி இறந்தார். இது குறித்து அவரது தந்தை விஜயகுமார் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.