கத்தியால் குத்தி 2 தொழிலாளிடம் பணம் கொள்ளை – கிளினர் கைது..! 

கத்தியால் குத்தி 2 தொழிலாளிடம் பணம் கொள்ளை – கிளினர் கைது..!  கோவை : அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாலின் தாஸ் (வயது 37) பினோத் மிலி (வயது 45 இவர்கள் இருவரும் பாலத்துறை விநாயக கோவில் வீதியை சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஹாலோ பிளாக் தொழிற்சாலையில்தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நேற்று மதுக்கரை மார்க்கெட் பகுதிக்கு கடைக்கு சென்று விட்டு லட்சுமி நகர் ரோடு வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் இவர்களை வழிமறித்து பணம் கேட்டனர். இவர்கள் கொடுக்க மறுத்ததால் கத்தியால் இருவரையும் குத்தினார்கள் இதில் ர 2பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 300 ரூபாயை பறித்க்கொண்டு அந்த ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர் .இதுகுறித்து அந்த தொழிற்சாலையில் உரிமையாளர் சரவணக்குமார் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வைரம் வழக்கு பதிவு செய்து கோவைப்புதூர் அறிவொளி நகர், சமத்துவ நகரை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 20)மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்களில் தினேஷ்குமார் கிளினராக வேலை பார்த்து வருகிறார்.கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 16 வயது சிறுவன் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.