கல்லூரி மாணவன் குட்டையில் மூழ்கி பலி..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை இ.பி. காலனியை சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17) அங்குள்ள தனியார் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ 3-வது ஆண்டு படித்து வந்தார்.நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், மகேஷ் அரவிந்த், சஞ்சய், ஆகியோருடன் காக்கவராயன்மலைப்பகுதியில் உள்ள கல்லு குழிக்கு குளிக்க சென்றார்கள்.ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கும் போது சதீஷ்குமார் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார்.இது குறித்து தீயணைப்புபடையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று மாணவன் சதீஷ்குமார் பிணத்தை மீட்டனர்.இதுகுறித்து அவரது தாயார் அமுதா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.